Sunday, August 31, 2014


ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார் வளாகம், அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் குருவருள் திருமுறை மன்றம் சார்பில் பன்னிரு திருமுறை பதிக விளக்கக் கூட்டம் சேக்கிழார் மன்றத் தலைவர் ந. செண்பகம் தலைமையில் நடைபெற்றது. அமைப்பாளர் ப. கோவிந்தன் வரவேற்றார். ஜெயசுகந்தி, ஆலந்தான் உகந்து என்ற 7ஆம் திருமுறையின் 61ஆவது பதிகத்தை பண்ணுடன் பாடினார். அப்பதிகத்துக்கு ராஜபாளையம் சேக்கிழார் மன்ற பொதுச் செயலர் கொ. பூமிநாதன் விளக்கம் அளித்தார். கே.பி. முத்துச்சாமி நன்றி கூறினார்.

நன்றி : தினமணி


0 comments:

Post a Comment