Saturday, November 7, 2015



வந்தவாசி அருகே, மோட்சம் அடைவதற்காக ஆகாரம் உண்ணாமல் தவமிருந்த சமண மூதாட்டி மருதேவி அம்மாள் (83) வியாழக்கிழமை மாலையில் சமாதியடைந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள தென்சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டுசாமி மனைவி மருதேவி அம்மாள். பட்டுசாமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். மருதேவி அம்மாள் மோட்சம் அடைவதற்காக அந்தக் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பார்சுவ தீர்த்தங்கரர் ஜினாலயத்தில் கடந்த 41 நாள்களாக ஆகாரம் உண்ணாமல் "சல்லேகனை விரதம்' எனும் தவம் மேற்கொண்டிருந்தார். இது சமண சமயத்தில் பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் தவ நிகழ்வாகும். 

இந்நிலையில் மருதேவி அம்மாள் வியாழக்கிழமை சமாதி நிலையை அடைந்தார். இதையடுத்து அவரது உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, சொந்த நிலத்தில் தேங்காய்கள் மூலம் எரியூட்டப்பட்டது.

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment